சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் 51வது பிறந்த நாள் விழா - கோவையில் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம்

கார்த்தி சிதம்பரத்தின் 51வது பிறந்தநாளையொட்டி கோவையில் உள்ள 51 கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதாக தகவல்.


கோவை: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது 51வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி, கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 51 திருக்கோவில்களில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாராதாம்பாள் கோவிலில் கார்த்தி சிதம்பரம் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஹரிஹரசுதன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி கலந்து கொண்டார். மேலும் ஐ.என்.டி.யூ.சி. தொழிற் சங்க தலைவர் கோவை செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதாகவும், அன்னதானம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...