கிணத்துக்கடவு - கோவை சாலையில் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு-சர்வீஸ் சாலை மூடப்பட்டதால் பயணிகள் அவதி

கிணத்துக்கடவு - கோவை சாலையில் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யும் பணிக்காக சர்வீஸ் சாலை மூடப்பட்ட நிலையில், போக்குவரத்து மற்றம் செய்யப்பட்டதால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு பேருந்துகளில் பயணித்தோர் தள்ளப்பட்டனர்.


கோவை: கிணத்துக்கடவு - கோவை சாலையில் உள்ள சர்வீஸ் சாலை பகுதியில் நிலத்தடியில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் பாதிக்கபட்டு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. சர்வீஸ் சாலை வழியாக செல்லும் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் மீண்டும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சரி செய்யும் பணி நடைபெற்றது.



பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டபட்டு உடைப்பை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணிக்காக சர்வீஸ் சாலை மூடபட்டதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.



இதனால் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி வந்த பேருந்துகள் கல்லாங்காட்டு புதூர் பகுதியிலேயே பயணிகளை இறக்கி விட்டுச் சென்றதால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணிகள் நடந்தே கிணத்துக்கடவு பகுதிக்கு சென்ற நிலை ஏற்பட்டது.

சர்வீஸ் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படும்போது பகல் நேரத்தில் சரி செய்யும் பணி நடைபெறுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் இது போன்ற பணிகளை இரவு நேரங்களில் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...