கூடலூரில் வீட்டின் சுவரை இடித்து தள்ளிய காட்டு யானை - மூதாட்டி பலியான சோகம்

நீலகிரி கூடலூர் அருகே வீட்டின் சுவரை காட்டு யானை சேதப்படுத்தியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, காட்டு யானையை உடனடியாக பிடிக்க கோரி பொதுமக்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவாலா, நாடு காணி, புளியம்பரை போன்ற பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நாள்தோறும் ஊருக்குள் வரும் காட்டு யானைகள் வீடுகளை உடைத்து வீட்டில் உள்ள அரிசி போன்ற உணவு பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்றிரவு வாழவயல் பகுதியில் பாப்பாத்தி என்பவரது வீட்டின் சுவரை மக்னா யானை இடித்து தள்ளியது.



இதில் வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த மூதாட்டி பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அவரது உறவினர்களான ராமலிங்கம்(68), சுந்தரம்பாள்(60) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். சுவர் இடிந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், யானையை விரட்டிவிட்டு படுகாயமடைந்த இருவரையும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் இறந்த பாப்பாத்தியின் உடலை எடுக்கவிடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் உள்ளிட்டோர் அந்த மக்னா யானை தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் உடனடியாக பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் உடலை எடுக்க அனுமதித்தனர்.

இதனிடையே வீட்டை சேதப்படுத்திய யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



யானை ஒன்று வீட்டின் சுவரை இடித்த தள்ளியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...