கோவை கற்பகம்‌ பொறியியல்‌ கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது

கற்பகம்‌ பொறியியல்‌ கல்லூரியில் இன்று நடைபெற்ற முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி அரங்கில்‌ மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கு.ஞானசம்பந்தம்‌ மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை கற்பகம்‌ பொறியியல்‌ கல்லூரியில் இன்று முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ தலைவர்‌ முனைவர்‌ இரா.வசந்தகுமார்‌ தலைமை தாங்கினார்‌. கல்லூரியின்‌ முதல்வர்‌ முனைவர்‌ விஜயகுமார்‌ அனைவரையும்‌ வரவேற்றார்‌.



இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உலகறிந்த தமிழறிஞர்‌ முனைவர்‌ கு. ஞானசம்பந்தம்‌ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்‌. அவர்‌ தனது உரையில்‌ இன்றைய மாணவர்கள்‌ கல்வியையும்‌ ஒழுக்கத்தையும்‌ இரு கண்களாக கருத வேண்டும்‌ என்று கூறினார்‌.

மேலும்‌ அவர்‌ தனது உரையில்‌ பொறியாளர்கள்‌ தான்‌ இந்த நாட்டை உருவாக்குகிறார்கள்‌, இயந்திரவியல்‌ போன்ற பல்வேறு துறைகளில்‌ நம்‌ நாடு மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாகக்‌ கூறினார்‌. எல்லோருக்கும்‌ எல்லாவிதமான வாய்ப்புகள்‌ கிடைப்பதில்லை ஆனால்‌ இந்த அளவிற்கு ஒரு பெரிய கல்லூரியில் படிக்கிறோம்‌ என்றால்‌ அதற்குக்‌ காரணம்‌ பெற்றோர்கள்‌ அவர்களைப் போற்றி வணங்க வேண்டும்‌ என்றார்‌.

நான்காண்டு என்பது நான்கு நிமிடங்கள்‌ போல ஓடிவிடக்கூடியது ஆகையால்‌ கவனச்சிதறல் இல்லாமல்‌ கற்க வேண்டும்‌ என்றும்‌ மிகப்‌ பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தவர்களும்‌ சாதாரண நிலையில்‌ இருந்து வந்தவர்கள்‌தான் ஆகையால்‌ நீங்களும்‌ பல புதுப்‌ புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும்‌ என்றும் நம்பிக்கையூட்டினார்.



1200 மாணவர்கள்‌ கலந்துகொண்ட இவ்விழாவின்‌ நிறைவாக கல்லாரியின்‌ முதலாமாண்டு மாணவர்கள்‌ துறைத்தலைவர்‌ முனைவர்‌ விஜயகுமார்‌ நன்றி கூறினார்‌.



இந்த விழாவில்‌ கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ முனைவர்‌. ஆதி பாண்டியன்‌ துறைத்தலைவர்கள்‌, பேராசிரியர்கள்‌, மாணவர்களின்‌ பெற்றோர்கள்‌ மற்றும்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...