கோவை கிணத்துக்கடவு அருகே அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

நல்லட்டிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் அரசு பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் பகுதி சேர்ந்தவர் பழனி. இவர் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தாமரைக்குளம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த டீக்கடையில் தேனீர் அருந்திவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கிச் அதிவேகமாக சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக முதியவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார் பழனியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...