கோவை விமான நிலையத்தில் ரூ.6.5 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்-4 பேர் கைது

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 4 பேரை கைது செய்த அதிகாரிகள், 6.5 கோடி ரூபாய் மதப்பிலான 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் மறைத்து கொண்டு வரப்படும் தங்க கட்டிகள் சென்னை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் அண்மை காலமாக அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா நகரில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த 18 பயணிகளின் உடமைகளை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார், கடலூரை சேர்ந்த சங்கர், பரமகுடியை சேர்ந்த ராம்பிரபு, மற்றும் சேலத்தை சேர்ந்த குமாரவேல் ஆகிய நான்கு பேரும் தாங்கள் அணிந்திருந்த உடைகளில் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்ததது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்த 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...