நீலகிரியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி - கூண்டு வைத்து பிடித்த வனத்துறை

மஞ்சூர் பகுதியில் இரவு நேரங்களில் உணவு தேடி வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்த நிலையில், முக்குருத்தி தேசிய பூங்கா வனப்பகுதியில் கரடியை விடப்பட்டது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரடி ஒன்று சுற்றித்திரிந்து வந்தன. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள் சென்று தூங்கும் அந்த கரடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் கடைகளின் கதவு, ஜன்னல்களை உடைத்து உணவு பொருட்களை உண்டு சேதப்படுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மஞ்சூர் பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருந்து வந்த நிலையில், அந்த காரடியை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து,கரடியின் நடமாட்டம் இருக்க கூடிய பகுதிகளை கண்டறிந்த வனத்துறையினர், கரடியை பிடிப்பதற்காக கடந்த வாரம் கூண்டு வைத்திருந்தனர்.

அந்த கூண்டில் இன்று அதிகாலை கரடி சிக்கியதை அடுத்து கரடியை அருகில் உள்ள முக்குறுதி தேசிய பூங்கா வனப்பகுதிக்குள் கொண்டு சென்று திறந்து விட்டனர். கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...