திருப்பூரில் நண்பர் பிரிந்த துக்கம் தாளாமல் பேருந்து முன்பு விழுந்து முதியவர் தற்கொலை - சிசிடிவி காட்சியால் பரபரப்பு

மன்னரை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது நண்பர் ஒரு வாரத்துக்கு முன்பு உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் தனியார் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மன்னரை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (75). இவர் தனது நண்பருடன் தினமும் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில், சுப்பிரமணியின் நண்பர் கடந்த வாரம் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சுப்பிரமணி கடந்த ஒரு வாரமாக சோகத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை சுப்பிரமணி தனியாக நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...