கோவை கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனிப்பொழிவு காரணமாக கோவை - பொள்ளாச்சி இடையேயான நான்கு வழிச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே மெதுவாக சென்ற நிலையில், 8 மணிக்கு மேலும் பனி விலகாததால் வாகன ஓட்டிகள் அவதி.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயிலும் இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

பனிப்பொழிவு காரணமாக கோவை - பொள்ளாச்சி இடையேயான நான்கு வழிச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டங்கள் சாலையை மறைத்தவாறு இருந்தன.

இதனால் நான்கு வழிச்சாலை வழியாக கோவை பொள்ளாச்சி சென்ற இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே மெதுவாகவே பயணித்தன.

மேலும் காலை 8 மணிக்கு மேலாகவும் இயல்பு நிலைக்கு திரும்பாததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...