கோவை ரத்தினபுரியில் தொடரும் இருசக்கர வாகன உதிரிபாக திருட்டு - ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை

ரத்தினபுரி மாணிக்கவாசகம் நகரை சேர்ந்த சரவணன் என்பவரது இருசக்கர வாகனத்தின் உதிரிபாகம் திருடப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நபரை போலீசாரிடம் பிடித்து கொடுத்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் ரத்தினபுரி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன உதிரிபாகங்கள் திருடப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக போலீசாரும் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோவை மாணிக்கவாசகம் நகரை சேர்ந்த சரவணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் வழக்கம்போல் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.



மறுநாள் காலையில் பார்த்த பொழுது வாகனம் சேதமடைந்து அதன் உதிரி பாகங்கள் மட்டும் திருடு போய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



இதுதொடர்பாக சரவணன் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.



சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் இரண்டு நபர்கள், பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்து உதிரிபாகங்களை திருடியது தெரியவந்தது.



மேலும் திருடிச் சென்றவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் சிவானந்த காலனி அண்ணா நகர் பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளது.



இந்நிலையில் போலீசார் அங்கு சென்று விசாரித்த பொழுது சிசிடிவி காட்சிகளில் திருடிச் சென்ற நபரே அங்கு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை பிடித்த சரவணன் அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் போலீசார் அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...