சட்ட நாளில் கருத்தரங்கு நடத்தும் யுஜிசி முடிவை கண்டித்து கோவையில் திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

சட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நவம்பர் 26ஆம் தேதியன்று, கருத்தரங்கு நடத்த முடிவெடுத்துள்ள யுஜிசியை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நவம்பர் 26ம் தேதி சட்ட நாளாக அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

"மன்னராட்சியின் மேன்மைகள், ஜனநாயக சிந்தனைகள்" ஆகிய இரு தலைப்புகளின் கீழ் கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் வேதங்கள், மனுஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம், இதிகாசம், புராணம் ஆகிய நூல்களில் காணப்படும் சிந்தனைகளை கொண்டு இந்த கருத்தரங்கு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

யுஜிசியின் இந்த கருதரங்கிற்கு பல்வேறு திராவிட கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட மாணவர் கழகம் சார்பில் யுஜிசி யின் இந்த கருத்தரங்கிற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் ராகுலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யுஜிசியை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...