நீலகிரி மாவட்ட காவல்துறையினருக்கு உதகையில் சிறப்பு திறன் மேம்பாட்டு மையம் திறப்பு

காவலர்களின்‌ திறன்‌ மேம்பாட்டிற்கு மட்டுமின்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் திறனையும்‌ மேம்படுத்தும்‌ வகையில்‌ தொடங்கப்பட்டுள்ள இந்த திறன் மேம்பாட்டு மையத்தை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் திறந்து வைத்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல்‌ துறையில்‌ பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக உதகையில் சிறப்பு திறன்‌ மேம்பாட்டு மையம்‌ திறக்கபட்டது.

இந்த மையத்தில்‌ காவலர்கள்‌ புலன்‌ விசாரணையில்‌ தங்களது திறனை வளர்த்துக்கொள்ளும்‌ வகையில்‌ சட்டம்‌ சார்ந்த புத்தகங்கள்‌, தடயவியல்‌ மற்றும்‌ இணையவழி குற்றங்கள்‌ சார்ந்த புத்தகங்கள்‌, உயர்‌ பதவிக்கான போட்டித்தேர்வில்‌ கலந்து கொள்ள பயிற்சி பெறும்‌ வகையிலும்‌ புத்தகங்கள்‌ வைக்கப்பட்டுள்ளன.

திறன் மேம்பாட்டு மையத்தை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் திறந்து வைத்தார்.



காவலர்களின்‌ திறன்‌ மேம்பாட்டிற்கு மட்டுமின்றி காவலர்களின்‌ குடும்ப உறுப்பினர்களின் திறனையும்‌ மேம்படுத்தும்‌ வகையில்‌ இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு துறையில்‌ தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு போலீசாருடன் கலந்துரையாடும் வகையில் கலந்தாய்வுக்‌ கூடம்‌ மற்றும் சமூக வலைதள பகுப்பாய்வு கூடம்‌ திறக்கப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டு மையம் தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் பேசியதாவது:



நீலகிரி மாவட்டத்தில் இணையதள குற்றங்கள் தொடர்பான தடயவியல் மற்றும் பகுப்பாய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் தேவையான சில மென்பொருட்கள் இதுவரை இல்லாமல் இருந்ததாகவும் ஆனால் தற்போது சென்டிமென்டல் அனாலிசிஸ் எனப்படும் புதிய மென்பொருட்கள் மேற்கு மண்டலத்தில் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் சமூக வலைதளங்களில் யாராவது வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அதனை எளிதில் கண்டறியலாம் என கூறினார். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளும் ஏதேனும் ஒரு வகையில் சைபர் குற்ற சம்பவங்கள் தொடர்பாக தான் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேற்கு மண்டலத்தைப் பொறுத்தவரை நீலகிரி மாவட்டத்தில் சைபர் புகார் தொடர்பாக வந்த குற்றங்களில் வங்கி கணக்குகளை முடக்கி ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு, புகார்தாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி சுதாகர் குறிப்பிட்டார்.

மேலும் அடையாள அட்டைகள் இல்லாமல் ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில் யாரையும் தங்க வைக்க கூடாது என்று கூறிய அவர்,தங்கும் விடுதிகளுக்கு வருபவர்கள் தரும் செல்போன் எண் பயன்பாட்டில் உள்ளதா? என்று சோதனை செய்யவும் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் நவீன ஆயுதங்கள் கொண்ட ஒமேகா-3 என்ற புதுப்படை தொடங்கப்பட்டு மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதாகவும் ஐ.ஜி சுதாரன் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் மேற்கு மண்டல டி.ஐ.ஜி.முத்துச்சாமி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...