கோவை கணபதி அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் - பரபரப்பு..!

கோவை கணபதி அருகே சாலையில் நடந்து சென்ற நபரின் செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை சரவணம்பட்டி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், இவர் கோவை கணபதி நேரு நகர் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு செல்போனில் பேசியவாறு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக யுவராஜ் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் நடந்து சென்றவரிடம் மர்ம நபர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...