விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சி பி ஐ எம் கட்சியினர் கைது


விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காந்திபுரம், சுந்தராபுரம் உள்ளிட்ட பத்து இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது வறட்சி கடுமையாக பாதித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பாலபாரதி குற்றம்சாட்டினார். 

மேலும், தமிழக அரசு செயல்படாமல் இருப்பதாக கூறிய அவர், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினர். 

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 83 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதேபோல கோவை மாவட்டத்தில் பத்து இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...