கோவை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் பரிதாப பலி

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவர்கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கோவை நோக்கிஅதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாக்கியம் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டுபடுகாயமடைந்தார். அருகில் இருந்தர்வர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் உற்கார்ந்து வந்த இளைஞரும் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த கிரிதர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...