பல்லடத்தில் கைது செய்ய சென்ற உதவி ஆய்வாளரின் கையை கடித்த குற்றவாளியால் பரபரப்பு

பல்லடம் அறிவொளி நகரில் கைது செய்ய சென்ற இடத்தில் குற்றவாளி கடித்ததால் படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் வசித்து வருபவர் பாபா பஹ்ரூதீன். இவருக்குமனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாபா பஹ்ரூதீனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே மனைவி வேலை செய்யும் பனியன் நிறுவனத்திற்க்கு சென்ற பஹ்ரூதீன் தனது மனைவிக்கு எப்படி வேலை கொடுக்கலாம் என கூறி மேலாளர் சஞ்சய் குமார் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பனியன் நிறுவன மேலாளர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற பல்லடம் போலீசார் பாபா பஹ்ரூதீன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில்பாபா பஹ்ரூதீன் பல்லடத்தை அடுத்தஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில்பணியாற்றும்அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்ததகவலையடுத்துபோலீசார் சம்பவ இடத்திற்குசென்றனர்.



அப்போது ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அலுவலகத்தின் கதவை அடைத்துக் கொண்டு பஹ்ரூதீன் அரை நிர்வாணமாக இருந்துள்ளார். இதனை அடுத்துஉதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கைது நடவடிக்கையில் ஈடுபடும் போதுயாரும் எதிர்பாரத விதமாக பாபா பஹ்ரூதீன் உதவி ஆய்வாளர் கையை பிடித்து கடித்துள்ளார்.

இதனால் உதவி ஆய்வாளர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பஹ்ரூதீனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.குற்றவாளி பஹ்ரூதீன் கடித்ததால் பலத்த காயமடைந்தஉதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...