காசி தமிழ் சங்கமத்திற்கான 5வது சிறப்பு ரயில் இன்று அதிகாலை கோவையில் இருந்து புறப்பட்டுச் சென்றது

காசி தமிழ்ச்சங்கமத்திற்கு தமிழகத்தில் இருந்து செல்லும் 5வது சிறப்பு ரயில் சேவை கோவையில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து 90க்கும் மேற்பட்டோர் பயணத்தை தொடங்கினர்.



கோவை: காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



இந்நிலையில் இந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 4 ரயில்கள் தமிழகத்தில் இருந்து காசிக்கு சென்றுள்ள நிலையில், 5வது ரயில் சேவை கோவையில் இருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் துவங்கியது.



தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 90 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் தங்களது பயணத்தை இன்று துவங்கினர்.

கடந்த 20ம் தேதி கோவையிலிருந்து சென்ற ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.



இன்று கோவையிலிருந்து கிளம்பியுள்ள ரயிலில் வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பலர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை பாரதிய ஜனதா கட்சியினர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.



இந்த நிகழ்வில் பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநிலத் தலைவர் வணங்காமுடி, ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் அரசூர் அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம் ரயில் சேவை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து துவங்குவதையொட்டி, ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையினர்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...