திருப்பூரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் - கூடுதல் காவல் தலைமை இயக்குநர் துவக்கி வைத்தார்

குள்ளேகவுண்டன் புதூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை துவக்கி வைத்த கூடுதல் காவல் தலைமை இயக்குநர் சஞ்சய் குமார், அங்கு பயிற்சியும் மேற்கொண்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குள்ளேகவுண்டன் புதூரில் தனியார் பள்ளி வளாகத்தில் பிளாட்டோஸ் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சஞ்சய் குமார் கலந்து கொண்டு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார். இதன் பின்னர் துப்பாக்கி சுடும் மையத்தின் தரத்தை ஆய்வு செய்து பயிற்சியாளர்களின் அனுபவம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.



இதனையடுத்து பயிற்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஏர் கன் வகைகளை பார்வையிட்டு துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டார். அப்போது திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரனும் அவருடன் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டார்.



இறுதியாக இருவருக்கும் பயிற்சி மையத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...