வால்பாறை முடீஸ் டவுன் பஜாரில் குடிநீர் விநியோகம் திடீர் நிறுத்தம் - ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் மனு

வால்பாறை முடீஸ் டவுன் பஜாரில் எந்த வித முன்னறிவிப்பின்றி BBTC நிர்வாகம் குடிநீர் விநியோகத்தை நிறுத்தி விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாரா மனு அளித்துள்ளனர்.



கோவை: வால்பாறை முடீஸ் டவுன் பஜாரை இயக்கி வந்த BBTC நிர்வாகம் அரசாங்கத்திடமிருந்து குத்தகையாக தனியார் சந்தை அனுமதி பெற்று பஜாரை நடத்தி வந்தது. அதன்படி பஜார் வளாகத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும், சந்தையை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும், சந்தை மக்களுக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும், வருடத்தின் மொத்த வசூலில் 15% யை வால்பாறை நகரியத்திற்கு செலுத்த வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்துள்ளது.



ஆனால் கடந்த சில ஆண்டுகளாக BBTC நிர்வாகம் அதனை பின்பற்றாமல் இருந்து வந்ததாகவும், இது குறித்து வால்பாறை நகராட்சியில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையை எடுக்க வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் வழங்கி வந்ததை நிர்வாகம் நிறுத்தி விட்டதாக கூறி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அரசு அதிகாரிகள் தனியார் நிர்வாகத்திற்கு சாதகமாகவே செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...