திருப்பூரில் மாற்றுத்திறனாளி மகனின் வாழ்வாதாரத்துக்காக ஆவின் பால் பூத் அமைக்க உதவிட கோரி ஆட்சியரிடம் தந்தை மனு

காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மகனின் வாழ்வாதாரத்துக்காக நீதிமன்ற வளாகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் பூத் வைக்க உதவி செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு அளித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் அங்குள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.



இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் அவரது இரண்டாவது மகன் அபினேஷ் (19) நூறு சதவீதம் மாற்றுத் திறனாளி ஆவார். இவரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீதி மன்ற வளாகத்தில் ஆவின் பாலகம் அமைத்துக் கொள்ள உதவிடக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது இரண்டாவது மகன் அபினேஷ் (19) நூறு சதவீதம் மாற்றுத் திறனாளி. அவருக்கு காது கேட்காது. உணவு குழாய் சிறிதாக இருப்பதால் திரவ உணவு மட்டுமே அருந்தி வாழ்ந்து வருகிறார்.

மாற்றுத்திறனாளியான எனது மகனுக்கு தினமும் 250 முதல் 300 செலவாகிறது. எனது மகனுக்கு வாழ்வாதாரம் வேண்டி திருப்பூர் நிதிமன்ற வளாகத்தில் அரசின் உதவியுடன் ஆவின் பாலகத்தை தாங்கள் அமைத்து தர உதவிட வேண்டும்.



மேலும் ஒரு விபத்தில் எனக்கும் கால் முறிந்து விட்டது. எனவே எங்களது மகனின் வாழ்வாதாரத்தை காக்க ஆவின் பாலகம் அமைத்து தர உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...