'கட்டாயப்படுத்தியதால் தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன்' : ஓ.பி.எ.ஸ் அதிரடி


'கட்டாயப்படுத்தியதால் தான் முதலமைச்சர் பதவியை  ராஜினாமா செய்தேன்', ஓ.பி.எ.ஸ் அதிரடி, தன்னுடைய அமைச்சரவையில் இருந்த சிலர் தன்னை கட்டாயப்படுத்தியதால் தான் முதலமைச்சர் பதவிய ராஜினாமா செய்ததாக பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெ. நினைவிடத்திற்கு வந்த அவர் சுமார் 40 நிமிடங்கள் அமைதியாக தியானத்தில் ஈடுபட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- 

*உண்மை நிலைமையை கூறப்போகிறேன். 

*ஜெ.வின் ஆன்மா உண்மையை கூறிவிடும்படி என்னிடம் கூறியது. அதனால், அவரின் நினைவிடத்திற்கு வந்து சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தேன். 

*ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு என்னை முதலமைச்சராக பதவி ஏற்குமாறு வலியுறுத்திய போது நான் மறுத்தேன்.கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என  என்னை வலியுறுத்தியதால் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.

*வர்தா புயலில் நான் தீவிரமாக வேலை செய்தது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

*முதல்வராக என்னை அமரவைத்து கொண்டு அவமானப்படுத்தினார்கள். மேலும், நீதிக்கு புறம்பாக அமைச்சர் உதயகுமார், சசிகலாவை முதலமைச்சராக வேண்டும் என்று பேட்டி கொடுத்தார். 

*உதயகுமார் பேட்டியை பார்த்து செல்லூர் ராசு என்னிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு மதுரை போய் அவரும் அவ்வாறே பேட்டி கொடுக்கிறார்.

*எண்ணை கசிவு குறித்து ஆய்வு நடத்த சென்றேன். 

*அந்த நேரத்தில் கூடிப்பேசி என்னை ராஜினாமா செய்ய நிர்பந்தித்தனர். 

*தொடர்ந்து, என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்தும் வாங்கினார்கள்.

*அ.தி.மு.க.வுக்கு நல்ல தலைமை வேண்டும்.தமிழகத்தை காக்க தன்னந்தனியாக போராடுவேன்.

* மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் வாங்குவேன்.

இவ்வாறு முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.

சசிகலா முதல் அமைச்சராக பொறுப்பேறக இருக்கும் நேரத்தில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது, போயஸ்  கார்டன் இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் சசிகலா-வுடன் ஆலோசனை நடத்துவதாகவும் இதுகுறித்து நாளை முக்கிய முடிவுகள் எடுக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...