வளர்ப்பு பன்றிகளை எடுத்து வர கேரள அரசு தடை - கோவையில் தமிழக பன்றி பன்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் இருந்து வளர்ப்பு பன்றியை எடுத்து வர செல்ல கேரள அரசு விதித்துள்ள தடை உத்தரவை கண்டித்து தமிழக பன்றி பன்னை விவசாயிகள் கோவை எட்டிமடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பன்றி பன்னைகள் உள்ளன. தமிழகத்தில் இருந்து வழக்கமாக அதிகளவு பன்றிகள் கேளராவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் பன்றிகள் தரமாக உள்ளதால், அவை எம்.பி.ஐ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு 44 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகள் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளா செல்லும் பன்றிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அம்மாநில தன்னார்வ அமைப்புகள் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.



இதனால் கடந்த 6 மாதங்களால் கேரளாவிற்கு பன்றிகள் ஏற்றுமதி செய்யாததால் சுமார் 200 டன் பன்றிகள் பன்னைகளிலேயே தேங்கியுள்ளதாகவும் இதனால் பல கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக பன்றி பன்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



எனவே கேரள அரசு தடை உத்தரவை திரும்ப பெறக்கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பன்றி பன்னை விவசாயிகள் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள எட்டிமடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால் என்பதால் வெளிநாடுகளுக்கு செல்லும் ஏற்றுமதி தடையாகியுள்ளதாகவும், உடனடியாக கேரளா அரசு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகள் கொண்டு செல்ல போடப்பட்ட தற்காலிக தடையை நீக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



தமிழக அரசு இது குறித்து கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், மத்திய அரசின் தரசான்றிதழான எம்.பி.ஐ வழங்கி தமிழகத்திலும் அந்த நிறுவனங்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...