கோவை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ தார்சாலை அமைக்கும்‌ பணிகள் - மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ தார்சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வாடு எண்‌.24-க்குட்பட்ட கொடீசியா சாலை முதல்‌ தண்ணீர்பந்தல்‌ சாலை வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ்‌ ஆயிரத்து 470 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, சாலையின்‌ நீளம்‌, அகலத்தினை பொறியாளர்கள் மூலம்‌ அளவீடு செய்வதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர், தார்சாலையின்‌ தரத்தை உறுதி செய்திட அதன்‌ மாதிரியினை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்திடவும்‌ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, துணை மேயர்‌ வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஷர்மிளா, மாமன்ற உறுப்பினர்‌ பூபதி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...