கோவை பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் - முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!

கோவை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய அளவிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


கோவை: கோவை மேற்குபெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்டகொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பன்னீர்மடை பகுதியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை கோயில் மண்டபத்தில் கடந்த 27 ஆம் தேதி மாலை 06.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை பொருளாளர் சண்முகக் கவுண்டர் மற்றும் முன்னாள் பொருளாளர் முருகேச கவுண்டர் ஆகியோர் தலைமைதாங்கினர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் M.S.மணி மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா மற்றும் ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்கவேல், P.M.இங்கோவன், ஜெகநாதன், மாணிக்க வாசகம் மற்றும் பன்னீர்மடை ஊராட்சி செயலாளர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகள், விரைவில் நடைபெற இருக்கும் கொடியேற்று விழா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் ஒன்றிய துணை செயலாளர் பொன்னுசாமி இறுதியாக நன்றியுரை கூறினார். மேலும் மாவட்ட, ஒன்றிய, நகர , பன்னீர்மடை ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி, தீரன் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலரும்ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.





Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...