உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் 16 குழந்தைகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன..!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், தங்க நாணயம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதனையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி,நவம்பர் 27ஆம் தேதி திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில்பிறந்த16 குழந்தைகளுக்குதங்க நாணயம், ரூ.2000 மதிப்புள்ள ஆடைகள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.



திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் நாகராஜ், மருத்துவமனை டீன் முருகேசன் ஆகியோர்கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க நாணயம் மற்றும் பரிசுகளை வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ராமதாஸ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர் ராஜு, தம்பி குமாரசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...