தனியார் வங்கி, நிதி நிறுவனங்களை கண்டித்து கோவையில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்..!

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், கடன் தொகையை செலுத்த தவறினால், அடியாட்களை வைத்து மிரட்டுவது, ஆட்டோவை தூக்குவது போன்ற செயல்களை தடுக்க வேண்டும்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு தனியார் வங்கி, மற்றும் நிதி நிறுவனங்கள் அதிகப்படியான அபராதங்களை வசூலிப்பதாக குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா காலங்களில் EMI தொகையை வசூலிக்க வேண்டும். கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை என எட்டு மாதங்களில் நான்கு மாதங்களையாவது தள்ளுபடி செய்ய வேண்டும்.

தனியார் வங்கி மற்றும் கடன் நிறுவனங்கள் 47 மாதம் கட்ட வேண்டிய நிலுவை தொகைக்கு 64 மாதமாக கட்ட சொல்லி வலியுறுத்துகின்றன. 13.5% வட்டியை 24.24% கட்ட வேண்டும் என நிர்பந்திக்கின்றன. கடன் தொகையை செலுத்த தவறினால் ஒரிரு நாள் தாமதமாக கட்டினாலோ ஆபாச வார்த்தைகளில் பேசுகின்றனர்.

அடியாட்களை வைத்து மிரட்டுவது, ஆட்டோவை தூக்குவது போன்ற செயல்களில் தனியார் நிதி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...