திருப்பூர் பல்லடத்தில் தனியார் கழிவு பஞ்சு அரவை ஆலையில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின..!

பல்லடம் அடுத்த பூமலூரில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு அரவை ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்திய நிலையில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சமீம். இவருக்கு சொந்தமான கழிவு பஞ்சு அரவை ஆலை பூமலூர் வண்ணந்தோட்டம் பகுதியில் இயங்கி வருகிறது. இதில் வட மாநில தொழிலாளர்கள் உட்பட 50 மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு தொழிலாளர்கள் சிலர் பணியில் இருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பஞ்சு மூட்டைகளில் தீ மளமளவென பரவிய நிலையில், தொழிலாளர்கள் அங்கிருந்து பத்திரமாக தப்பிச் சென்றுள்ளனர்.



இதையடுத்து தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் மங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 5 தண்ணீர் லாரிகள் மற்றும் ஜேசிபி உதவியுடன் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் மற்றும் கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...