கோவை, திருப்பூர் மாவட்டங்களை ரயில்வே துறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது - கோவை ரயில் நிலையம் முன்பு பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: காசி தமிழ் சங்கமத்திற்கு இலவச ரயில் சேவை வழங்கும் மத்திய அரசு, இங்குள்ள மாவட்டங்களை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி கோவையில் பல்வேறு கட்சிகள் சார்பில் கோவை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, காங்கிரஸ், எஸ்.டிபி.ஐ, விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மே17 இயக்கம், தமிழ்நாடு வணிகர் பேரவை, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்திய ரயில்வே துறையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், இந்திய ரயில்வே துறை மோடி ஆட்சியில் தமிழகத்தை முற்றிலுமாக புறக்கணித்து வருகிறது.



குறிப்பாக, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல ரயில் சேவை தேவை என்ற நீண்ட நாள் கோரிக்கையை பல ஆண்டுகளாக ரயில்வே துறை புறக்கணித்து வருகிறது.

மேலும், இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அந்த ரயில் சேவைகளையும் மீண்டும் துவக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.



மேலும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும், மேட்டுப்பாளையம் முதல் பொள்ளாச்சிக்கு மெமோ ரயில் இயக்குவது, அனைத்து ரயில்களையும் சிங்காநல்லூர் இருகூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தி செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...