கோவையில் காவல் உதவி ஆய்வாளர் போல வேடமிட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்ட நபர் கைது…!

ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்த செல்வம், உதவி ஆய்வாளர் போல் போலியாக சீருடை அணிந்து கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்வது போல் மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வந்தது தெரியவந்தது.


கோவை: கோவை கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஜான்சன் கல்லூரி அருகே உள்ள சர்வீஸ் சாலையில் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்போது, அவரை நிறுத்திய காவல்துறை உடையில் இருந்த ஒரு நபர், தான் உதவி ஆய்வாளர் என்று கூறி சோதனை செய்துள்ளார். அப்போது, அவர் மீது சசிகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், காவல் நிலையத்திற்கு வந்து இது குறித்து தகவல் அளித்துள்ளார்.



இதையடுத்து, கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ரோந்து சென்று பார்த்த போது, புல்லட் வாகனத்தில் உதவி ஆய்வாளர் சீருடையில் வந்த நபரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

அப்போது, அவர் போலி உதவி ஆய்வாளர் என்பது தெரியவந்தது.

விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் திம்மன்பட்டியை சேர்ந்த சேர்ந்த செல்வம் (39) என்பதும், தற்சமயம் கருமத்தம்பட்டியில் தங்கி தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்ததும், தொடர் விசாரணையில், செல்வம் உதவி ஆய்வாளர் போல் போலியாக சீருடை அணிந்து கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்வது போல் மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் உதவி ஆய்வாளர் எனக் கூறி ஒரு பெண்ணை திருமணம் செய்ததோடு, தான் தற்போது தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரிடமும் போலீஸ் எனக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். மில்லுக்கு வேலைக்கு செல்லும் போது மட்டும் உடையை மாற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, செல்வத்தை அழைத்துச் சென்ற போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...