கோவையில் காவல் உதவி ஆய்வாளர் போல வேடமிட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்ட நபர் கைது…!

ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்த செல்வம், உதவி ஆய்வாளர் போல் போலியாக சீருடை அணிந்து கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்வது போல் மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வந்தது தெரியவந்தது.


கோவை: கோவை கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஜான்சன் கல்லூரி அருகே உள்ள சர்வீஸ் சாலையில் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்போது, அவரை நிறுத்திய காவல்துறை உடையில் இருந்த ஒரு நபர், தான் உதவி ஆய்வாளர் என்று கூறி சோதனை செய்துள்ளார். அப்போது, அவர் மீது சசிகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், காவல் நிலையத்திற்கு வந்து இது குறித்து தகவல் அளித்துள்ளார்.



இதையடுத்து, கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ரோந்து சென்று பார்த்த போது, புல்லட் வாகனத்தில் உதவி ஆய்வாளர் சீருடையில் வந்த நபரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

அப்போது, அவர் போலி உதவி ஆய்வாளர் என்பது தெரியவந்தது.

விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் திம்மன்பட்டியை சேர்ந்த சேர்ந்த செல்வம் (39) என்பதும், தற்சமயம் கருமத்தம்பட்டியில் தங்கி தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்ததும், தொடர் விசாரணையில், செல்வம் உதவி ஆய்வாளர் போல் போலியாக சீருடை அணிந்து கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்வது போல் மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் உதவி ஆய்வாளர் எனக் கூறி ஒரு பெண்ணை திருமணம் செய்ததோடு, தான் தற்போது தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரிடமும் போலீஸ் எனக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். மில்லுக்கு வேலைக்கு செல்லும் போது மட்டும் உடையை மாற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, செல்வத்தை அழைத்துச் சென்ற போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...