பொங்கல் போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா பேரவையினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தமிழகத்தில் பதிவு பெற்றுள்ள 40 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கும் பொங்கல் போனசாக ரூ.7,000 வழங்கவும், ஆண் குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.



கோவை: தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவையின் சார்பில், தமிழ்நாட்டில் பதிவு பெற்றுள்ள 40 லட்சம் தொழிலாளர்களுக்கும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 7000 ரூபாயை போனசாக வழங்க வேண்டும்.

வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 4 லட்சம் ரூபாயை பெறும் வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும். தொழிலாளர்களின் ஆண் குழந்தைகளுக்கும் 10,11,12 ம் வகுப்புகளுக்கான உதவித்தொகையை வழங்கிட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்த கோரிக்கை மனுவானது HMS பேரவையின் துணைத் தலைவரும், மாவட்ட கண்காணிப்பு குழுவின் உறுப்பினருமான மனோகரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

மனுவை அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், உடனடியாக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...