பொங்கல் போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா பேரவையினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தமிழகத்தில் பதிவு பெற்றுள்ள 40 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கும் பொங்கல் போனசாக ரூ.7,000 வழங்கவும், ஆண் குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.



கோவை: தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா பேரவையின் சார்பில், தமிழ்நாட்டில் பதிவு பெற்றுள்ள 40 லட்சம் தொழிலாளர்களுக்கும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 7000 ரூபாயை போனசாக வழங்க வேண்டும்.

வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 4 லட்சம் ரூபாயை பெறும் வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும். தொழிலாளர்களின் ஆண் குழந்தைகளுக்கும் 10,11,12 ம் வகுப்புகளுக்கான உதவித்தொகையை வழங்கிட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்த கோரிக்கை மனுவானது HMS பேரவையின் துணைத் தலைவரும், மாவட்ட கண்காணிப்பு குழுவின் உறுப்பினருமான மனோகரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

மனுவை அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், உடனடியாக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...