கோவை எட்டிமடையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி தனியார் கல்லூரி ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்..!

எட்டிமடை அருகே கடந்த 2ஆம் தேதி, சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பின் தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் கல்லூரி சமையல் ஊழியர் சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


கோவை: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (56). இவர் எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (02.12.2022) அதே கல்லூரியில் ஓட்டுநராக பணியாற்றி வரும் அஜித்குமார் என்ற இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எட்டிமடை பொங்கேகவுண்டன்புதூர் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், அதே கல்லூரியில் பணியாற்றும் சாய்தரன் என்ற இளைஞர் வந்த மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மூவரும் கீழே விழுந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த சுப்பிரமணியனுக்கு பின் தலையில் பலத்த காயமடைந்து மயங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணியன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...