கோவை பாலத்துறையில் டிப்பர் லாரி மோதியதில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த பள்ளிச் சிறுமி படுகாயம்..!

பாலத்துறையில் சாலை அருகே விளையாடிக்கொண்டிருந்த பள்ளிச் சிறுமியின் டிப்பர் லாரி ஏறியதில் காலில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், லாரி ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் பாலத்துறை அடுத்த கருஞ்சாமி கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளியான இவரது மகள் கனிஷ்கா (12) பச்சாபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமி சக குழந்தைகளுடன் பாலத்துறை - பச்சாபாளையம் சாலை அருகே கில்லி விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது சாலை அருகே சென்ற குச்சியை எடுக்க கனிஷ்கா சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சிறுமியின் இரண்டு கால் பாதத்தின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே வேகமாக டிப்பர் லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் மீது மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...