கோவை கவுண்டம்பாளையம் அருகே சேவல் சண்டை சூதாட்டம் - 8 பேரை கைது செய்த போலீசார்..!

கவுண்டம்பாளையம் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.10,700 பணம் மற்றும் 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்த நிலையில், 8 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகேயுள்ள மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் சிலர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவது தெரியவந்தது.

இதனையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்த வடவள்ளியைச் சேர்ந்த சிவானந்தன், மணிகண்டன், செந்தில்குமார், பாபு, ரத்தினபுரியைச் சேர்ந்த கனகராஜ், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ராஜா, செல்வக்குமார் மற்றும் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 10,700 ரூபாய் பணம் மற்றும் 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 8 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...