கோவை மாவுத்தம்பதி ஊராட்சியில் சமுதாய உறிஞ்சிக்குழி மற்றும் மாணவர்களுக்கான நூலக திறப்பு விழா

மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பதி பழங்குடியினர்‌ கிராமத்தில்‌ டெல்லி ஐ.ஐ.டி நிதியுதவியின் மூலம் அமைக்கப்பட்ட சமுதாய உறிஞ்சிக்குழி மற்றும் நூலகம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பதி பழங்குடியினர்‌ கிராமத்தில்‌ டெல்லி ஐ.ஐ.டி நிதியுதவியின் மூலம் சமுதாய உறிஞ்சிக்குழி மற்றும் மாணவர்களுக்கான நூலக திறப்பு விழா நடைபெற்றது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை நவக்கரையில்‌ அமைந்துள்ள ஏஜேகே கலை அறிவியல்‌ கல்லூரி ஐந்து கிராமங்களைத்‌ தத்தெடுத்து பல்வேறு சமுதாயப்‌ பணிகளை செய்து வருகிறது.

அந்த வகையில்‌ டில்லியில்‌ அமைந்துள்ள இந்திய தொழில்‌ நுட்ப கழகம்‌ (IIT Delhi) தேசிய ஒருங்கிணைப்பு நிறுவனம்‌, உன்னத பாரத இயக்கம்‌ 2.0 (Unnat Bharat Abhiyan) ஒரு லட்சம்‌ மதிப்பிலான நிதியை மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பதி பழங்குடியினர்‌ கிராமத்தில்‌ சமுதாய உறிஞ்சிக்குழி (community soak pit) அமைக்கும்‌ திட்டத்திற்கு ஏ.ஜே.கே கலை அறிவியல்‌ கல்லூரிக்கு கொடுத்து அனுமதி வழங்கியது.



அந்தப்பணியை ஏஜேகே கலை அறிவியல்‌ கல்லூரி சிறப்பாக நிறைவுசெய்த நிலையில் நேற்றைய தினம் (06.12.2022) சமுதாய உறிஞ்சிக்குழி திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ஏ.ஜே.கே. கலை அறிவியல்‌ கல்லூரியின்‌ செயலர்‌ முனைவர்‌ பேராசிரியா்‌ அஜித்‌ குமார்‌ லால்‌ மோகன்‌‌, தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேளாண்‌ வணிக வளர்ச்சியின்‌ பேராசிரியரும்‌, உன்னத பாரத இயக்கத்தின்‌ வட்டார ஒருங்கிணைப்பாளருமான முனைவர்‌.இ.சோமசுந்தரம்‌ ஆகியோர் கலந்து கொண்டு சமுதாய உறிஞ்சிக்குழியைத்‌ திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு‌ கொண்டு வந்தனர்‌.



இந்தத் திட்டம்‌ புதுப்பதி பழங்குடியினர்‌ மக்கள்‌ சுகாதாரமாகவும்‌, டெங்கு, மலேரியா போன்ற கொசு தொல்லையிலிருந்து விடுபடவும்‌, நோயில்லாமல்‌ வாழவும்‌ உதவும்‌ திட்டமாகும்‌. ஊர்பொதுமக்கள்‌ இத்திட்டத்திற்கு வரவேற்பு கொடுத்து இத்திட்டத்தைப்‌ பாராட்டினர்‌.

அதனை தொடர்ந்து ஏஜேகே கலை அறிவியல்‌ கல்லூரியின்‌ தான்‌ தாம்‌ யோஜனா திட்டத்தின்‌ கீழ்‌ மாவுத்தம்பதி ஊராட்சி நூலகத்தைப்‌ புதுப்பித்து ஏஜேகே கலை அறிவியல்‌ கல்லூரியின்‌ செயலர்‌ முனைவர்‌ பேராசிரியர்‌ அஜித்‌ குமார்‌ லால்‌ மோகன்‌ நூலகத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்‌.

மேலும், ஊர்‌ மக்கள்‌ மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்‌ படித்து பயன்பெறும்‌ வகையில்‌ நூலகத்திற்கு தேவையான புத்தகங்களையும்‌ கல்லூரியின்‌ செயலர்‌ முனைவர்‌ பேராசிரியர்‌ அஜித்‌ குமார்‌ லால்‌ மோகன்‌ ‌ வழங்கினார்‌.

இந்த விரண்டு நிகழ்வுகளில்‌ மாவுத்தம்பதி ஊராட்சித் தலைவர்‌, துணைத் தலைவர்‌, வார்டு உறுப்பினர்‌, செயலர்‌, ஊர் பொதுமக்கள்‌, பேராசிரியா்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...