திருப்பூர் அவிநாசி அருகே மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு

அவிநாசி அடுத்த கானூரில் உள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்காவில், மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் கார்த்திகை தீபத்தையொட்டி தர்கா முழுவதும் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த கானூர் ஊராட்சியில் அமைந்துள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா தமிழகத்தில் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.



தமிழ்நாடு வக்பு வாரியத்தில் இணைக்கப்பட்ட இந்த தர்காவில் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் சென்று வழிபடுவது வழக்கம்.



இந்நிலையில், கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அப்பகுதி மக்கள் தர்காவில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பெண்கள் தர்காவில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

மேலும், தர்காவை சுற்றிலும் பெண்கள் கார்த்திகை விளக்குகளை ஏற்றினர். தர்காவில் தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் என எந்த ஒரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் இந்த தர்காவிற்கு ஜாதி, மதம், இனம் பாராமல் அனைத்து தரப்பு மக்களும் வருகிறார்கள்.

கார்த்திகை தீபத்தின் போது இப்பகுதியில் உள்ள மக்கள் இங்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆண்டுதோறும் வழக்கமாக கொண்டுள்ளனர். மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக இந்த தர்கா விளங்குகிறது. தொன்று தொட்டு இங்கு கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது.

மேலும் இங்கு ஆண்டு தோரும் சந்தனக்கூடு உருஷ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சந்தனக்கூடு உருஷ் விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தி, மேட்டுப்பாளையம், சென்னை, மைசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...