கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் புகார்களை பதிவு செய்ய போலீசார் அழைப்பு

காந்திபுரம் 100 அடி சாலை, 3வது வீதியில் இயங்கி வந்த முத்து லேண்ட் டெவலப்பர்ஸ், முத்துவிலாஸ் சிட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார்களை நேரடியாக வந்து பதிவு செய்ய கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு.


கோவை: கோவை காந்திபுரம் 100 அடி சாலை, 3வது வீதியில் முத்து லேண்ட் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், முத்துவிலாஸ் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், நெல்லை முத்து விலாஸ் ஸ்வீட்ஸ் & குருப்ஸ் மற்றும் தங்க நகை சிறுசேமிப்பு திட்டம் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வந்தன.

இந்த நிறுவனங்கள் மீதும், அதன் இயக்குநர் பரமசிவம் (49) மற்றும் D.கிருத்திகா ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் பரமசிவம் (49) என்பவர் கடந்த 2019 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதுவரை இந்த நிறுவனங்கள் மீது 2,026 புகார் மனுக்கள் பெறப்பட்டு குற்றப்பத்திரிக்கை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை கோயம்புத்தூர் டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்படி நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள், கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் தங்களுடைய அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் மனுவை அளிக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...