கூடலூரில் அட்டகாசம் செய்து வந்த PM 2 மக்னா யானை பிடிபட்டது - மக்கள் நிம்மதி..!‌

18 நாட்களாக வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த யானை ஒரு வழியாக இன்று பிடிபட்டதையடுத்து அப்பகுதி மக்களை நிம்மதி அடைந்துள்ளனர். இப்படிப்பட்ட யானை முதுமலை அடர் வனப் பகுதிக்குள் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, புளியம்பரை, வாழவயல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வீடுகளை மற்றும் மனிதர்களை தாக்கி வந்த பிரச்னைக்குரிய PM 2 மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

கடந்த 19ஆம் தேதி வாழவயல் பகுதியில் குடியிருப்பு சேதப்படுத்தி பாப்பாத்தி இன்று மூதாட்டியை PM2 மக்னா யானை கொன்றதையடுத்து, அந்த யானையை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. சாலை மறியல், ஆட்சியரிடம் மனு என்று பலகட்ட போராட்டங்களை முன் எடுத்த கூடலூர் மக்களின் கோரிக்கைக்கு சேவு சாய்த்த தமிழக அரசு, யானையை பிடிக்க உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, 21ஆம் தேதி முதல் 50 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் PM 2 மக்னா யானையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ட்ரோன், கண்காணிப்பு கேமராக்கள் என பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் பயன்படுத்தி வந்த போதும், இரவு நேரங்களில் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள புளியம்பாறை, வாட்சிக்கொள்ளி, தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சேதப்படுத்தியும், பகல் நேரங்களில் அடர்ந்த வனப் பகுதிக்குள் PM 2 யானை சென்று வந்ததால், யானையை பிடிப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வந்தது.

கடந்த 18 நாட்களாக தொடர்ந்து PM 2 மக்னா யானை வனத்துறையினருக்கு சிக்காமல் போக்கு காட்டி வந்த நிலையில், நேற்று இரவு தேவாலா வாட்சிக் கொல்லி பகுதியில் குடியிருப்பில் சேதப்படுத்திய யானையை வனத்துறையினர் பின் தொடர்ந்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன்படி, இன்று பிற்பகல் 2 மணி அளவில் மையக்கொல்லி எனும் பகுதியில் இரண்டு மருத்துவர்கள் கும்கி யானைகள் மீது அமர்ந்தவாறு PM 2 யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.



விஜய், சுஜய், கிருஷ்ணா, வசிம் ஆகிய நான்கு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடிபட்ட PM 2 யானையை முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



கட்டுக்கடங்காமல் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த மக்னா யானையை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால், எந்த நேரமும் யானையால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கூடலூர் பகுதி மக்கள் தற்போது யானை பிடிபட்டது என்ற செய்தியை கேட்டு நிம்மதி அடைந்துள்ளனர்.



மேலும், இரவு பகல் பாராமல், யானையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...