கோனியம்மன் திருத்தேர் வெள்ளோட்ட விழாவினையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்


கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் சார்பாக 2017-ம் ஆண்டு 13.02.2017 அன்று திருத்தேர் வெள்ளோட்ட விழாவும் மற்றும் 21.02.2017 முதல் 06.03.2017 வரை திருவிழா நடைபெறும்பொழுது மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்; 

அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் திருத்தேர் வெள்ளோட்டத்தின் போதும் திருத்தேர் விழாவின்போதும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் காவலர்கள் கொண்ட பாதுகாப்புக்குழு அமைக்கப்பட உள்ளது. திருக்கோவிலில் பாதுகாப்பு காரணத்திற்காக உலோக தடுப்பு கருவி பொருத்தப்பட உள்ளது. தேர் வடம் பிடிக்கும் பகுதியினைச் சுற்றி பொதுமக்களுக்க எந்தவித இடையூறுகள் ஏற்படாத வண்ணம்  பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட உள்ளது. மேலும், சாதாரண உடையில் காவலர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பேருந்துகள், இதர வாகனங்களின் வருகையை தேர் செல்லும் பாதையிலிருந்து மாற்று பாதையில் விட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

தீயணைப்பு வாகனம் ஒன்றினை தயார் நிலையில் கோவில் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கவும், மற்றொரு வாகனத்தை வெள்ளோட்ட நாளிலும், தேரோடும் நாளிலும் தேருடன் செல்ல தயார் நிலையில் வைத்திருக்கவும் ஏற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. திருத்தேர் வெள்ளோட்ட நாளான 13.02.2017 அன்றும், திருத்தேரோட்ட நாளான 01.03.2017 அன்றும் மருத்துவக்குழு முதலுதவி வாகனம் ஒன்று ஏற்பாடு செய்து தேரோட்டம் முடியும் வரை தேருடன் செல்லவும், தேவைப்படுவேருக்கு அவசர மருத்துவ உதவி வழங்கவும் தயார் நிலையில் அமைக்கப்பட உள்ளது.

 

திருக்கோயில் நிகழ்ச்சியின் போது குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெற தக்கநடவடிக்கைகள் மேற்கொண்டு தேர் செல்லும் ரத வீதியில் தேர் புறப்படுவதற்க்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீர் தெளிக்க கோவில் நிர்வாகத்தினருடன் கலந்து தக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. போதிய அளவு குடிநீர் வசதிகள் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

திருத்தேரேட்ட நிகழ்ச்சியில் தேர் செல்லும் பாதைகளில் மின் இணைப்பு ஒயர்கள் இருந்தால் தேர் வரவுள்ள பாதையில் இரண்டு மணி நேரத்திற்க்கு முன்பாகவே தற்காலிகமாக அகற்றியும், திருவிழா நாட்களில் திருக்கோவிலில் மின்சாரம் தடையின்றி கிடைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தேர் செல்லும் பாதைகளில் உள்ள மேடு பள்ளங்களை சீர்படுத்தி சாலை  செப்பனிடப்பட்டுள்ளது. திருத்தேர் வெள்ளோட்ட நாளான 13.02.2017 அன்றும் 28.02.2017,01.03.2017 ஆகிய மூன்று நாட்களும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

இவ்விழாவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு இறையருள் பெற்றிட வேண்டுமாய் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். 

இக்கூட்டத்தி மாநகர காவல் துணை ஆணையர் லட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சிதம்பரம், கோட்டாட்சியர் மதுராந்தகி, கோனியம்மன் கோவில் செயல் அலுவலர் விமலா, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை அலுவலர் சந்திரன், வருவாய்துறை அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...