கோவை குனியமுத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞர் கைது..!

புட்டுவிக்கி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞரை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அவரிடம் இருந்து ரூ.28,500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் புட்டுவிக்கி சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் (9.12.2022) இந்த டாஸ்மாக் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் ரூ.500 நோட்டு கொடுத்து மது பாட்டில் வாங்கியுள்ளார்.

அப்போது, கடையில் இருந்த காசாளர் அந்த நோட்டை சோதனை செய்த போது அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து, குனியமுத்தூரில் போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் மதுக்கரை மலை நகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் ரமேஷ் (20) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் காலி மதுபாட்டில்களை சேகரித்து விற்பனை செய்யும் வேலை செய்து வந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சாலையில் கிடந்த கவரில் ரூ.28,500 மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்ததாகவும் தெரியவந்தது.

இதனை கொண்டே டாஸ்மாக் கடையில் நேற்றைய தினம் மதுபாட்டில்களை வாங்கியுள்ளார். இதையடுத்து ரமேஷை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.28,500 மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் கடையில் ஒருவர் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...