நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: கோவையில் ரசிகர் மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தியும், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்து ரசிகர் மன்றத்தினர் உற்சாகம்.


கோவை: தமிழகத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா அவரது ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் அதன் நிர்வாகிகள் கடந்த 3 நாட்களாக ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கோவையில் பாபா படம் வெளியான தியேட்டர்கள் முன்பு மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையிலான ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (நேற்று) 200 ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் 200 ரசிகர்களை ரஜினியின் பாபா படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.



ரஜினி பிறந்த நாளான இன்று சலீவன் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் சாமி ராகவேந்திரா கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்களும் நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து மாலையில் ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோவிலில் 108 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். பின்னர் கோட்டை ஈஸ்வரன் சங்கமேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம் நடத்தினர்.

கோவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் 73 கிலோ இனிப்புகளை வாங்கி பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர்.



ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி ரஜினி ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், நிர்வாகிகள் பாபு, பட்டணம் ரவி, பிரேம்நாத், மணிவண்ணன், வடிவேல், வெள்ளியங்கிரி, செந்தில்குமார், ராஜேஷ்குமார், ஆனந்த கிருஷ்ணசாமி, செல்லதுரை, ரஜினி கண்ணன், சிவகுமார், பிரபு, பாலாஜி, ஆறுச்சாமி, சாணவாஸ், சுதாகர், ஷான் பாஷா, ஆட்டோ பாபு, ஆட்டோ மனோகர், முருகேசன், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...