கோவையில் போட்டோ ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

பீளமேடு அருகேயுள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் அபுமோகராஜ் (34). இவர் கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் இளங்கோ நகரில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த பணியின் காரணமாக அவர் ஆனைகட்டி சென்றதாக தெரிகிறது. இதனால் ஸ்டூடியோவில் வேலை செய்து வரும் ஸ்டிபன்ராஜ், கடையை கவனித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று வழக்கம் போல ஸ்டிபன்ராஜ் ஸ்டூடியோவில் வேலைகளை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை ஸ்டுடியோவை திறப்பதற்காக சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் உள்பட பல்வேறு பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அபுமோகராஜூக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே கோவை திரும்பினார்.

பின்னர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன், அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து அபுமோகராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும், அந்த போட்டோ ஸ்டுடியோ அருகே சுற்றித்திரிந்த கார்கள் குறித்தும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...