வனவாசத்திற்கு பின் மீண்டும் தாய் கட்சிக்கு வந்துவிட்டேன் - பா.ஜ.க.,வில் இருந்து விலகிய ம.நீ.ம நிர்வாகி..!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க.,வில் இணைந்த மக்கள் நீதி மய்யத்தின் (ம.நீ.ம) முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார்.



கோவை: இரண்டு வருட வன வாசத்திற்கு பிறகு தாய்க்கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு தாயுள்ளத்தோடு நம்மவர் அரவணைத்து ஏற்றுக் கொண்டார், என்று ம.நீ.ம முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க.,வில் இணைந்த மக்கள் நீதி மய்யத்தின் (ம.நீ.ம) முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார்.

மீண்டும் கட்சியில் இணைந்ததை அடுத்து, கோவை டவுன்ஹால் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், தொண்டர்கள் அனைவரும் தாயுள்ளத்தோடு வரவேற்பு கொடுத்தனர். கடைக்கோடி தொண்டர்கள் வரை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி கூற முதற்பயணமாக கோவை வந்துள்ளேன்.

உடனடியாக களத்திற்கு சென்று தொண்டர்களின் கருத்தை கேட்டு அதனை தன்னிடம் கூறுமாறு நம்மவர் என்னிடம் தெரிவித்தார். அனைத்து மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், இங்குள்ளவர்கள் தேர்தலில் உழைத்தமைக்கு நன்றி செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்.

நாடாளுமன்ற தேர்தலில் ம.நீ.ம அமோக வெற்றி பெற ஆலோசனை நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு இது முதல் தொடக்கமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் தங்கவேலு, மாநில செயலாளர்கள் மயில்சாமி, மூகாம்பிகா ரத்தினம், அனுஷா ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...