நீலகிரி பந்திப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி பெண் யானை உயிரிழப்பு

நீலகிரி அடுத்த பந்திப்பூர் அருகே கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு மைசூர் நோக்கி சென்ற லாரி மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தின் வழியாக தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களை இணைக்க கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கேரளா, கர்நாடகா செல்லும் கனரக வாகனங்கள் கக்கநல்லா மற்றும் முத்தங்கா சாலைகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றன.



இந்நிலையில் நேற்று இரவு கேரளாவில் இருந்து முத்தங்கா வழியாக மைசூர் நோக்கிச் சென்ற கோவை பதிவு எண் கொண்ட லாரி பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் அருகே சாலையை கடக்க முயன்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெண் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பந்திப்பூர் வனத்துறையினர் லாரியை பிடித்து வைத்துள்ளதுடன் யானையை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு  தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் லாரி மோதி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...