தைப்பூசத்தையொட்டி ஜன.15 முதல் பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் - பொள்ளாச்சி எம்.பி கு.சண்முகசுந்தரம்

ரயில்வே சேர்மன் V.K.திரிப்பாத்தியை சந்தித்து உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், தென்னை சார்ந்த பொருட்களை வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல பொள்ளாச்சியில் கிசான் ரயில் திட்டம் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரான கு. சண்முக சுந்தரம், ரயில்வே சேர்மன் V.K.திரிப்பாத்தியை நேரில் சந்தித்தார்.

அப்போது, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் வலியுறுத்தினார்.

மேலும், உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் விளைகின்ற தேங்காய், இளநீர் அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் தென்னை நார் சார்ந்த பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த பொருட்களை குறைந்த செலவில் மும்பை, டெல்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல உதவும் வகையில், கிசான் ரயில் திட்டத்தை பொள்ளாச்சியில் தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...