கோவையில் ரூ.94 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த மேயர் கல்பனா

கோவை தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் ரூ.94 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்நல மையம்‌ கூடுதல் கட்டிடம், வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகள்‌ கட்டுமான பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


கோவை: கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.83க்கு உட்பட்ட சுங்கம்‌ நகர்நல மையத்தில்‌ பெங்களுரை சேர்ந்த HF Interior தொண்டு நிறுவனம்‌ நிதியிலிருந்து ரூ.44 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ மருத்துவமனையின்‌ கூடுதல்‌ கட்டிடங்கள்‌, குடிநீர் மற்றும்‌ கழிவறை வசதிகள்‌ உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளது‌.

தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.88க்குட்பட்ட குனியமுத்தூர்‌, ரைஸ்மில்‌ சாலையில்‌ உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில்‌ அமெரிக்காவில்‌ வசித்து வரும்‌ செந்தில்குமார்‌, ஹேமாகுமார்‌ ஆகியோர்‌ குடும்ப சார்பில்‌ 100 சதவீத பங்களிப்பாக நமக்கு நாமே திட்டத்தில்‌ ரூ.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 5 கூடுதல்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகள்‌ கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளது.



மொத்தம் ரூ.94 லட்சம்‌ மதிப்பீட்டிலான இந்த 2 கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வியில் கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்‌.



இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளா்‌ மரு.மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவா்‌ மீனாலோகு, மாமன்ற உறுப்பினர்கள்‌ செந்தில்குமார்‌, வி.சுமா, நகர்நல அலுவலர்‌ மரு.பிரதீப்,‌ வா.கிருஷ்ணகுமார்‌, உதவி ஆணையாளர்‌ மகேஷ் கனகராஜ்‌,

மத்திய மண்டல நகர்நல அலுவலா்‌ மரு.வசந்த்‌ திவாகர்‌, சுகாதார அலுவலர்‌ ராமச்சந்திரன்‌, உதவி பொறியாளர்‌ கனகராஜ்‌, சுகாதார ஆய்வாளர்‌ ஸ்ரீரங்கராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளிட்டோர் உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...