கோவையில் எஸ்.பி.ஐ வங்கியின் கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை ரயில் நிலையம் அருகே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் இன்றும், நாளையும் நடைபெறும் கடன் வழங்கும் முகாமின் தொடக்க விழாவில் ஆட்சியர் சமீரன் பங்கேற்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள குறிஞ்சி காம்ப்ளக்சில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வளாகத்தில் கடன் வழங்கும் முகாமின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்று முகாமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.



இந்த முகாமானது இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் முகாமில், அரசு நிதியுதவி பெறும் திட்டங்களுக்கு கடன், இளம் தொழில் முனைவோருக்கான Standup India & Mudra திட்டங்கள், மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் கூடிய PMEGP, NEEDS முதலான திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.



மேலும், விவசாய அபிவிருத்தி திட்டங்கள், வேளாண் உட்கட்டமைப்பு திட்டங்கள், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள், மாணவர்களுக்கான கல்விக் கடன் மற்றும் ஏராளமான அரசு கடன் திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. கடன் முகாமில் தகுதி பெற்றவருக்கு உடனடி கடன் ஒப்புதல்கள் வழங்கப்படும்.

இந்தக் கடன் முகாமில், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், KVIC, NABARD, வேளாண் துறை, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம், ஆவின், வேளாண்மை சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண்மை வர்த்தகத் துறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கரும்பு உற்பத்தி மையம், வானவராயர் வேளாண்மை கல்லூரி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பங்கு பெற்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...