கோவையில் விமானப்படை மருத்துவமனையை விமானப்படை தலைமை பயிற்சி கட்டளை அதிகாரி திறந்து வைத்தார்

கோவை வந்துள்ள விமானப்படை பயிற்சி கட்டளை அதிகாரி, மன்வேந்திர சிங், ரெட் பீல்டு சாலையில் உள்ள விமான படை கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், விமானப்படை மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.



கோவை: கோவை வந்துள்ள இந்திய விமானப்படையின் பயிற்சி கட்டளை அதிகாரி ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் ரேஸ்கோர்ஸ் பகுதி ரெட் பீல்டு சாலையில் உள்ள விமான படை கல்லூரியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



அவரது வருகையை ஒட்டி, விமானப்படை கல்லூரியில் ஏர் கமாண்டர் ராம்கிஷோர் முன்னிலையில் விமானப்படை போர் வீரர்கள் மரியாதை அளித்தனர்.



விமானப்படை பயிற்சி கட்டளை அதிகாரி, மன்வேந்திர சிங் கல்லூரியின் தற்போதைய பயிற்சி குறித்தும் பராமரிப்பு மற்றும் நிர்வாக அம்சங்களையும் மதிப்பாய்வு செய்தார்.



பின்னர், விமானப்படை மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அங்குள்ள அம்சங்கள் புதிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



இந்நிகழ்வில், சிறப்புரை ஆற்றிய விமானப்படை பயிற்சி கட்டளை அதிகாரி, மன்வேந்திர சிங், பயிற்சியில் சிறந்து விளங்குவதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளும் அனைவருக்கும் அவரது பாராட்டுக்களை தெரிவித்தார்.

மேலும், IAF இன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான சிறந்த உழைப்பை தொடர்ந்து வெளிப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...