தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்தில் புதருக்குள் சென்று மாயமானது. டிசம்பர் 31ல் மூதாட்டியை தாக்கி உயிரிழக்கச் செய்த காட்டெருமையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


Coimbatore: கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட கெம்பனூர் சுற்றுவனப் பகுதியில் கடந்த 6 மாதங்களாக ஒரு காட்டெருமை சுற்றித்திரிந்து வந்த நிலையில், தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் திடீரென மாயமாகி வனத்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த காட்டெருமை அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அட்டுக்கல் பெரும்பள்ளத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரை இந்த காட்டெருமை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து வனத்துறையினர் காட்டெருமையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர்.

அதன் பின்னரும் அட்டுக்கல், தாளியூர் வன எல்லைப் பகுதிகளில் காட்டெருமை சுற்றித்திரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று காலை அந்த காட்டெருமை தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள மோகன் என்பவரின் பாக்கு தோட்டத்துக்குள் புகுந்தது.

உடனடியாக தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டெருமையை கண்காணித்து வந்தனர். அப்போது காட்டெருமை அருகிலிருந்த புதருக்குள் சென்று திடீரென மாயமானது. அதன் பின்னர் அது எங்கும் தென்படவில்லை.

இது காட்டுக்குள் திரும்பிச் சென்றதா அல்லது வேறு பகுதிக்கு நகர்ந்ததா என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறையினர் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...