கோவை ராமநாதபுரம் பகுதியில் அழுகிய நிலையில் 22 வயது இளைஞர் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை….!

கோவை ராமநாதபுரம், கணேஷபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (22) என்பவர் வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (22). இவர் கோவை ராமநாதபுரம், கணேஷபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக வீட்டின் கதவு திறக்காமல் இருந்த நிலையில், இன்று வீட்டில் இருந்து கடும் நுர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கார்த்திக் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கார்த்திக் சடலமாக மீட்கப்பட்ட இடத்தின் அருகே விஷம் பாட்டில் கைப்பற்றப்பட்டது. முதல் கட்ட விசாரணையில், கடந்த வாரம் திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற கார்த்திக், அங்கு பெற்றோர்களுடன் ஏற்பட்ட சண்டையால் கோபித்து கொண்டு வந்தது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...