கோவை வனத்துறை சார்பில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் குறிஞ்சி வனம் திட்டத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்

கோவை மாவட்ட வனத்துறை சார்பில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவங்கி வைத்தார். இளைப்புரசு, வாகை, அத்தி, மூங்கில், தேக்கு என 200 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.



கோவை: கோவை மாவட்ட வனத்துறை சார்பில் “குறிஞ்சி வனம்” என்ற திட்டத்தின் கீழ் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி இன்று துவங்கியது.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பிள்ளையாளர்புரம் பகுதியில் துவக்கப்பட்ட மரம் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் கலந்து கொண்டு மரக்கன்று நடவு செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

முதல்கட்டத்தில், இந்த வனத்தில் இளைப்புரசு, வாகை, அத்தி, மூங்கில், தேக்கு என 200 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.



இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், சலீம் அலி பறவைகள் சரணாலய முதுநிலை அறிவியலாளர் பிரமோத், மதுக்கரை வனச்சரகர் சந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...