கோவை வனத்துறை சார்பில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் குறிஞ்சி வனம் திட்டத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்

கோவை மாவட்ட வனத்துறை சார்பில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவங்கி வைத்தார். இளைப்புரசு, வாகை, அத்தி, மூங்கில், தேக்கு என 200 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.



கோவை: கோவை மாவட்ட வனத்துறை சார்பில் “குறிஞ்சி வனம்” என்ற திட்டத்தின் கீழ் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி இன்று துவங்கியது.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பிள்ளையாளர்புரம் பகுதியில் துவக்கப்பட்ட மரம் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் கலந்து கொண்டு மரக்கன்று நடவு செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

முதல்கட்டத்தில், இந்த வனத்தில் இளைப்புரசு, வாகை, அத்தி, மூங்கில், தேக்கு என 200 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.



இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், சலீம் அலி பறவைகள் சரணாலய முதுநிலை அறிவியலாளர் பிரமோத், மதுக்கரை வனச்சரகர் சந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...